January 13, 2025

சரித்திர புருஷர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம்.




பீடிகை

இறைவன் ஒரு மனிதனுக்கு நலனை நாடினால் அவனை (சிறந்த விடயங்களுக்கு) பயன்படுத்திக் கொள்வான் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் 'இறைவனின் தூதரே எவ்வாறு அனை பயன்படுத்திக் கொள்வான்?' என கேட்டபோது 'அவரது மரணத்திற்கு முன்னர் நல்ல, சிறந்த பணிகளை செய்வதற்கான வழிகளை இலகுபடுத்திக் கொடுப்பான்' என்று இறைத்தூதர் அவர்கள் பதலளித்தார்கள்.

87 வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்து அமைதியாக ஆரவாரமின்றி பல பணிகள் செய்த ஒரு நல்ல ஆன்மா தன் இறைவன் பக்கம் மீண்டுள்ளது.

'ஆதமின் மகன் மரணித்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிற அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டுவிடும் ஒன்று நிலையான தர்மம் இரண்டாவது பயனுள்ள கல்வி மற்றையது அவனுக்காக பிரார்த்திக்கும் நல்ல பிள்ளைகள்' என்ற நபி மொழக்கு அமைவாக, தனது நிலையான இல்லத்திற்கு அவர் நிறயவே சம்பாதித்து வென்றுள்ளார், அவை அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


இளமையும் கல்வியும்

1937 ஆம் ஆண்டு மே மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி மாவனல்லை நகரில் அமைந்துள்ள உயன்வத்தை கிராமத்தில் அசன் லெப்பை மற்றும் ஹனீபா உம்மா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

மௌலவி ஏ எல் எம் இப்ராஹிம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை தன்னுடைய கிராமத்தில் அமைந்துள்ள நூறானியா முஸ்லிம் வித்யாலயத்தில் கற்றார்.

 பின்னர் 1948 ஆம் ஆண்டு தன்னுடைய  11 வது வயதில்  மகரகமை கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து மார்க்க கல்வியை பெற்றார் ஒன்பது வருடங்கள் அங்கே கல்வி கற்ற பின்னர் 1957 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறினார்.

 தொடர்ந்து ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுவத்தி மூன்றாம் ஆண்டு அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டார்.

1966 ஆம் வருடம் தனது சொந்த முயற்சியினால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார்.  பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் G.A.Q  பரிட்சைக்கு தோற்று சித்தி அடைந்தார் அதன் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளமானி B.A  பரீட்சைக்கு தோற்றி முதல் தர சித்தி அடைந்தார் தன்னுடைய முதுமாணிக்கட்கைக்காக பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டு முதுமாணி கற்கையை நிறைவு செய்தார்.

 மேலும் 1987 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மன்னர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை தொடர்ந்து அங்கும் முதுமாணிக்கையை நிறைவு செய்தார்.

கலாநிதி பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்காக “அரபு மதரஸாக்களின் தோற்றம் வளர்ச்சி”  தொடர்பான ஒரு தலைப்பில் தன்னுடைய ஆய்வு கட்டுரையை அவர் மேற்கொண்டார் போதிலும் அந்த ஆய்வை சமர்ப்பிக்க முடியாது போனது.

 பிற்பட்ட காலத்தில் மீண்டும் தன்னுடைய கலாநிதி கற்கையை நிறைவு செய்வதற்காக அமெரிக்கா செல்ல தீர்மானித்திருந்த போதிலும் கூட ஜமாத்தை இஸ்லாமியின் பொறுப்புக்களை சுமந்து இருந்ததனால் அவரால் அதனை நிறைவேற்ற முடியாது போனது.

மௌலவி இப்றாஹிம் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் பல உயர்ந்த பண்புகளைப் பெற்றவராக காணப்பட்டார், எப்போதும் பணிவானவராகவும், பிறரை மதிக்கக் கூடியவராகவும் காப்பட்டார்.

 அத்தோடு மாற்றுக் கருத்துக்களை செவிமடுப்பவராகவும், மதிக்கக் கூடியவராகவும் இருந்தார். பொறுமையும், பொறுப்புணர்வும் இவரிடம் காணப்பட்ட இன்னுமிரண்டு சிறப்புப் பண்புகள், எப்போம் தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவராகவும், தேசிய சர்வதேச விடங்களில் கரிசனையுள்ளவராகவும் காணப்பட்டதுடன், நிதானம் தவறாதவராகவும் தீர்மாணங்களில் உறுதியானவராகவும் காணப்பட்டார்.

 

அழைப்புப் பணியில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளும் வழிமுறைகளும்

 



உஸ்தாத் இப்ராஹிம் அவர்கள் தூரநோக்கு உள்ள ஒரு தலைவராகவும்ஒரு செயல் வீரராகவும் காணப்பட்டார்.

சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல்வேறு அறிஞர்களுடனும் அமைப்புக்களுடனும் அவர் உறவைப் பேணி வந்தார். அதேவேளை எல்லா வகையான சிந்தனை சார்ந்த புத்தகங்களையும் வாசிக்கக் கூடியவராகவும் காணப்பட்டார்.

இமாம் ஹசன் அல் பன்னா, மௌலானா அபுல் ஹசன் அலி அந் நத்வி, மௌலானா மௌதூதி,  போன்றவர்கள் உட்பட இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அறிஞர் பெறுமக்களின் சிந்தனைகளை கற்றார். ஆயினும்  எப்போதுமே தன்னுடைய சூழமைவை மையமாகக் கொண்டு அனைத்தையும் சிந்திக்க கூடியவராக காணப்பட்டார்.

உஸ்தாத் இப்றாஹீம் அவர்களது அழைப்புப் பணியின் ஆரம்ப காலங்களிலேயே அவரது எழுத்துப் பணியும் ஆரம்பித்தது என்று குறிப்பிடலாம், 1957களில் வெளிவந்த 'உண்மை உதயம்' 1958களில் வெளிவந்த 'வழிகாட்டிமற்றும் அல்ஹஸாத் போன்ற சஞ்சிகைளில் தொடர்ந்தும் எழுதிவந்ததுடன் புத்தகங்களையும் படைத்துள்ளார்.

 

உஸ்தாத் இப்ராஹிம் அவர்களுடைய எழுத்துக்கள், பேச்சுகள், செயற்பாடுகள் ஆகியவற்றை நாங்கள் அவதானிக்கின்ற போது எப்போதுமே

 1. நடுநிலையான சிந்தனை

2. சூழமை கருத்தில் கொள்ளல்

3.  இலகுபடுத்துதல்

 4.சிறுபான்மையினருக்கான சட்டச் சட்டகம்

5.  சகவாழ்வு

போன்ற கருத்துக்கள் தொணிப்பதனை  அவதானிக்க முடியும். அவர் எந்த காலத்திலும் இந்த அடிப்படைகளில் இருந்து விலகிச் செல்லவில்லை.

 

உஸ்தாத் இப்றாஹீமிடம் காணப்பட்ட இன்னுமொரு உயரிய பண்பு, எந்தப் பிரச்சனைக்கும், சிக்கல்களுக்கும் ஒருபோதும் சமூகத்தை குறை கூறமாட்டார், பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் அது கல்விசார் பிரச்சணையாக, பண்பாடு சார் பிரச்சணையாக, இருப்பு சார் பிரச்சணையாக, பொருளாதாரம் சார்ந்த பிரச்சணையாக எதுவாக இருந்து போதிலும் அந்த பிரச்சணைகளுக்கான அடிப்படையை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திக்கக் கூடியவராக காணப்பட்டார்.

அதேபோன்று அவருடைய தாவா வழிமுறைகளாக

1. சமூக ஒற்றுமை

2. நிறுவனங்களை அமைத்தல்

3. வளங்களை திட்டமிட்டு பயன்படுத்துதல்

4. பிறருடன் ஒத்துழைத்து பணியாற்றுதல்

5. தேசிய சர்வதேச உறவுகளை பலப்படுத்தல்

போன்ற விடயங்களை குறிப்பிட முடியும்.

உஸ்தாத் இப்ராஹீம் அவர்கள் மேற்கொண்டு வந்த பணிகளை நாங்கள் எடுத்து நோக்குகின்ற போது இவற்றை திட்டத் தெளிவாக உள்ள முடியுமாக இருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகம் சார்ந்த எத்தகைய ஒரு பணி நடக்கப்பட்ட போதிலும் அதிலே ஏதோ ஒரு வகையிலே இவருக்கும் ஒரு வகிபாகம் காணப்படுகின்றது என்பதை அவதானிக்க முடியும் இந்த வகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சில பணிகளை நோக்குமிடத்து

1. பாடசாலை ஆசிரியராக சேவையாற்றியமை.

2. கபூரிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராக கடமையாற்றியமை.

3.  பல்கலைக்கழ விரிவுரையாளராக கடமை ஆற்றியமை.

4. இலங்கை ஜமாத்தை இஸ்லாமியின் செயலாளர்.

5. இலங்கை ஜமாத்தே இஸ்லாமியரின் தலைவர்.

6. தேசிய கல்வி நிறுவனத்தின் ஆலோசகர்

7. ஜாமியா நளீமிய்யா உருவாக்கம் மற்றும் அதன் பாடத்திட்டத்தில் பங்காற்றியமை.

8. ஜம்இய்யதுல் உலமாவின் உயர் மட்ட உறுப்பின்ர்

9. இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்.

10. இஸ்லாஹிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரி.

11. இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி.

12. பாத்திமாதுஸ் ஸஹ்ரா அரபுக் கல்லூரி.

13. ஆயிஷா சித்திக்கா அரபுக் கல்லூரி.

14. Good Hope சர்வதேச பாடசாலை.

15. ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான சரண்டர் நிறுவனம்.

16. திஹாரியில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலை.

17. தன்வீர் அகடமி

போன்ற பல்வேறு வேலை திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

 


அல்குர்ஆனின் செய்தி மக்களை சென்றடைய வேண்டும், மக்கள்  குர்ஆனை கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

 குறிப்பாக தஃவதுல் குர்ஆன் என்ற அமைப்பை நிறுவி அதற்கு ஊடாக போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல் புத்தகங்களை வெளியிடுதல் என்ற பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.

அல்குர்ஆனை ஓதுவோம்

அதனை விளங்குவோம்

அதன்படி நடப்போம்

அதன்பால் அழைப்போம்.

என்ற வாசங்கள் இன்றும் நினைவில் நீங்காது இருக்கிறது.

மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய தப்ஹீமுல் குர்ஆன் அல்குர்ஆன் விரிவுரையை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து அதில் பல ஆலிம்களையும் துறை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு திட்டத்தை நிறைவு செய்தார்.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு முன்னின்று உழைத்துள்ளார், 1980களில் மஸ்ஊத் ஆலிம் போன்றோருடன் இணைந்து 'இத்திஹாதுல் முஸ்லிமின்அமைப்பை நிறுவி அதற்காக உழைத்தார்.

அது மாத்திரம் இல்லாமல் பல்வேறு சர்வதேச தேசிய தொண்டு நிறுவனங்களின் உருவாக்கத்தில் அதன் ஸ்தாபக உறுப்பினராக அவர் செயல்பட்டு இருக்கின்றார் உதாரணமாக வாமி நிறுவனம், சர்வதேச இஸ்லாமிய நலன்புரி அமைப்பு  போன்ற சர்வதேச அமைப்புகளை குறிப்பிட முடியும்.

அது மாத்திரமில்லாமல் பல்வேறு சர்வதேச அறிஞர்களுடனான உறவைப் பேணி வந்துள்ளார் கலாநிதி அஹ்மத் தொதன்ஜி, நாதிர் நூரி, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்னும் பல சர்வதேச அறிஞர்களை நண்பராக நண்பர்களாக இவர் கொண்டு இருந்தார்.

 

ஆரவரமில்லாமல் அமைதியாய் இறை பணி செய்து, புனித றமழானில் தன் இறைவன் பக்கம் மீண்டுள்ள இந்த மாமனிதரை அல்லாஹ் பொறுந்திக் கொண்டு அவனது உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸில் அவனது ஹபீப் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.


No comments:

Post a Comment

சரித்திர புருஷர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம்.

பீடிகை இறைவன் ஒரு மனிதனுக்கு நலனை நாடினால் அவனை (சிறந்த விடயங்களுக்கு) பயன்படுத்திக் கொள்வான் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க...